இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புறாக்கூண்டு வீடு

படம்
  Wtwstories 2021F Februarystory2 Wtwகதைஎழுது புறாக்கூண்டு வீடு அன்று மதுரத்தின் மனம் பழைய நினைவுகளிலேயே நின்றது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்.. திருமணமாகி சுந்தரத்துடன் குடியேறியது செம்மேடு என்ற அந்த சின்ன கிராமத்தில். மாமியார், மாமனார், இரண்டு  நாத்தனார்கள் என்று கூட்டுக் குடும்பம். காலை சூரிய உதயம் பார்த்து ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து வேலை ஆரம்பித்தால்  தூங்கவும் நேரம் இருக்காது. சுந்தரத்துக்கு சென்னையில்  வேலை. இவளால் அவன் சம்பளத்தில் தனிக் குடித்தனம் செய்ய முடியாதென்பதால் இவள் வாசம் புக்ககத்து மனிதர்களுடன். காலை சமையல் சாப்பாடு முடிந்ததும் அப்பளம் இடுவது ஊறுகாய் போடுவது என்று சிறிது கண் அயரவும் நேரமிருக்காது. கொல்லையில் மா ,எலுமிச்சை,நாரத்தை மரங்கள் இருந்ததால் ஜாடி ஜாடியாக ஊறுகாய்கள் ஊறிக் கொண்டிருக்கும்! சுந்தரம் வந்து விட்டால் வீட்டில் ஸ்பெஷல் சாப்பாடு! திரும்ப அவன் ஊருக்குப் போவதை அவளால் தாங்க முடியாது. ஆனால் அவன் சம்பளத்தில் தான் நாத்தனார்கள் திருமணம் முடிக்க வேண்டும். மாமனா ருக்கு போஸ்ட் ஆஃபீஸ் வேலை. அதிக சம்பளம் கிடையாது. அவன் திரும்பப் போனதும் மதுரம் அசோக

என் இனிய தோழி!

படம்
#WTW கதைஎழுது #HappyBirthdayWTW #wtwstories2021 #March2 #WTWSuperWoman என் இனிய தோழி! எனக்கு பள்ளி நாட்களில் தோழிகள் இருந்தாலும் படிப்பு முடிந்தபின் அந்தத் தோழமை தொடரவில்லை.  திருமணத்திற்குப் பின் மொழி தெரியாத வெளி மாநில வாசத்தில் நட்புக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை!  என் கணவருக்கு வங்கியில் அடிக்கடி  வரும் வேலை மாற்றங்களால் பல ஊர்களில்  சில சிநேகிதிகள்கிடைத் தாலும், அடுத்த ஊருக்குச் செல்லும்போது,  அந்த சிநேகம் சில நாட்களிலேயே கடிதத்  தொடர்புடன் துண்டித்துப் போகும். பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். வாழ் நாளில் நாம் பலருடன் பழகினாலும் யாராவது ஒருவர் மட்டுமே உள்ளார்ந்த, ஆழ்ந்த நட்புடன் இருக்க முடியும்.   நாங்கள் ஈரோட்டில் இருந்த சமயம் என் மகனுடன் படித்த மாணவனின் தாயாக  அறிமுகமான என் தோழி முத்துலட்சுமியின் ஆழமான, அழுத்தமான நட்பு, 30 ஆண்டு களுக்கும் மேலாகத் தொடர்கிறது. எங்கள் எண்ணங்கள், ரசனைகள், அபிப்பிராயங்கள் ஒரே அலைவரிசையில் இருந்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகு ஈரோட்டை விட்டு மாற்றலாகி நாங்கள் கிளம்பியபோது, பிரிவு தாங்காமல் இருவருமே கண்கலங்கி விட்ட

WTWFriendship

படம்
  #WTW கதைஎழுது #HappyBirthdayWTW #wtwstories2021 #March2 #WTWFriendship ஐந்தாவது பிறந்தநாள் காணும் WTW தளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த தளத்தில் நான் இணைவதற்குக் காரணமே தோழி பத்மா  LalithaPadmaBalasundaram என்பதை எப்படி மறந்தே போனேன்🤔 அவர்தான் என்னை இதில் இணைத்துவிட்டவர். அவர் மட்டுமே நான் நேரில் பார்த்து பேசி பழகிய தோழி! நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்சியில் எங்கள் நண்பர் ஒருவர் வீட்டு விசேஷம் ஒன்றில் சந்தித்தோம். அவர் டென்மார்க்கிலிருந்து அவர் அம்மா வீட்டிற்கு ஸ்ரீரங்கம் வந்திருந்தார். பார்த்த சிலமணி நேரத்திலேயே வெகுநாள் பழகியது போன்ற உணர்வு ஏற்பட்டது. மிக எளிமையானவர். இனிமையானவர்.  நாங்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அது எனக்கு கிடைக்கவில்லை. அதன்பின் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வப்போது வாட்ஸப்பில் பேசுவதோடு சரி. விரைவில் மீண்டும் சந்திப்போம்.