இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சார்தாம் யாத்ரா..13

படம்
  சார்தாம் யாத்திரையில் நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கிய ஆலயங்கள். உத்தரகாசி உத்தர காசி  பாகீரதி நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. பல ஆறுகள் கொண்ட இம்மா வட்டத்தில், பாகீரதியும் யமுனையும் பெரிய ஆறுகள்.  வாரணாசியில் உள்ளது போலவே இங்கேயும் ஒரு 'அசி' நதி இருக்கிறது. ஸ்கந்த புராணத்தில் 'கலியுகத்தின் காசி' என்று சொல்லப்பட்டுள்ளது இத்தலம். கலியுகம் பாதி முடியும்போது இப்போதுள்ள பத்ரி கேதார் தலங்கள் அழிந்து விடுமாம். பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி பத்ரியாகவும் உத்தரகாசி கேதாராகவும் மாறிவிடும் என்கிறது புராணம். உத்தர காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிக அழகாக உள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் தவத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம். கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் சிவலிங்கம் தென்திசை நோக்கி லேசாக சாய்ந்திருக்கிறது. எமன் மார்கண்டேயரின் உயிரைக் கவர முயன்றபோது, மார்கண்டேயர் சிவபெருமானைக் கட்டி அணைத்துக்கொண்டதால், அவரை எமனிடமிருந்து சிவபெருமான் காப்பாற்றினார்; அதன் காரணமாகத்தான் சிவலிங்கம் தென்திசையில் சாய்ந்திருக்கிறது என்று கூறுகிறது ஸ்தல புரா

சார்தாம் யாத்ரா..12

படம்
  பஞ்ச பத்ரி விஷால்பத்ரி பத்ரி விஷால் பத்ரிநாதரின் பிரதான தலமான பத்ரிநாத். பூஜைகள் நடக்கும்போது, 'ஜெய் பத்ரி விஷால் கி'என்று பக்தர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். அது பற்றி ஏற்கெனவே எழுதி விட்டேன். யோகபத்ரி  ரிஷிகேஷிலிருந்து பத்ரி செல்லும் சாலையில் ஜோஷிமட்டிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது யோகத்யான்பத்ரி ஆலயம்.  சாலையிலிருந்து சற்று தூரம் கீழே இறங்கி இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பாண்டுகேஷ்வர் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் யோகபத்ரி யைக் குறித்துப் பாண்டு தவம் செய்ததால் இது பாண்டுகேஸ் வர் ஆலயம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் உள்ள யோகபத்ரி நாதர் பாண்டுவால்  பிரதிஷ்டை செய்யப்பட்டவர். பாண்டு தன்  மனைவிகள் குந்தி, மாத்ரி இருவருடனும் இங்கே தங்கி யிருந்தபோதுதான் பாண்டவர்கள் பிறந்தனர். அதன் பிறகு ஒரு சமயம், மாத்ரியுடன் இணைந்து அதனால் முனிவர் சாபத்தின்படி தலை வெடித்து இறந்ததும், தன்  கணவனின் மரணத்துக்குத் தானே பொறுப்பு என்று கருதி மாத்ரி தன்  உயிரை மாய்த்துக்கொண்டதும் இந்த இடத்தில்தான். சந்நிதியில் யோகபத்ரியும், லக்ஷ்மிநாராயணரும் மாத்ரியின் விக

நிர்ஜலா ஏகாதசி..21.6.'21

படம்
ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா மற்றும் பீம ஏகாதசி எனப்படும். பீமன் இந்நாளில் நீர் கூட அருந்தாமல் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர்.  ஒருநாள் பீமன் வியாசரிடம் "குருவே, ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் என்கிறார்கள். அன்னை குந்தி, அண்ணன் யுதிஷ்டிரர், திரௌபதி, அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என எல்லோரும் தவறாமல் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கி றார்கள்.ஆனால் என்னால் ஒருவேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாதே”என்றான் பீமன். "ஏகாதசி விரதம் நினைத்ததை நிறைவேற்றும். முயற்சி செய்து பார்". "குருவே. வருடம் ஒரு ஏகாதசி நான் நீங்கள் சொன்னபடி விரதம் இருக்கிறேன். அதில் எல்லா ஏகாதசி பலனும் எனக்கு கிடைக்க வேண்டும்". "அதற்கும் ஒரு வழி உண்டு பீமா. ஆனி மாத வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படும். அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தால் எல்லா ஏகாதசி பலனும் அடையலாம்" என்றார்.  "அதன் முறை என்ன குருவே?" "அதிகாலையில் எழுந்து நீராடி அந்த வாசுதேவனை வணங்கி நாள்

சார்தாம் யாத்ரா..11

படம்
  பஞ்சபிரயாகை சார்தாம் யாத்திரையில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய முக்யமான சங்கமங்கள் ஐந்து.அவையே பஞ்சப்பிரயாகைகள். இரண்டு அல்லது மூன்று நதிகள் சந்திக்கும் இடங்கள் பிரயாகை என்று சொல்லப்படுகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  அலஹாபாத் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும் சிறப்பு வாய்ந்த தலமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இவ்விடம் பிரயாகை எனப்படும். சார்தாம் யாத்திரை செல்லும்போது உத்தர்கண்ட் மாநிலத்திலும் பஞ்ச பிரயாகை என்று சொல்லப்படுகிற ஐந்து பிரயாகைகள் உள்ளன. அவை தேவப்ரயாகை, விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை. இவை அலகநந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும்.  தேவபிரயாகை ஹிமாலயப் பயணத்தில் தேவ பிரயாகை ஒரு முக்கியமான தலமாகும். உத்தர்கண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் இருக்கிறது தேவ பிரயாகை. சதோபந்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும், கௌமுகியிலிருந்து பாய்ந்தோடி வரும் பாகீரதியும் சங்கமித்து கங்கையாகப் பெயர் பெறும் இடமாகும். சற்றே பழுப்பு நிறத்தில் அலக்நந்தாவும், இளம் பச்சை நிறத்தில் பாகீரதிய

சார்தாம் யாத்ரா..10

படம்
  யமுனோத்ரி தாம் யமுனோத்ரியை தரிசனம் செய்வது ஒரு சவாலாக இருந்தது. பத்ரி, கேதார்,  கங்கோத்ரியை அடுத்து யமுனோத்ரி நான்காவது புண்ணியத்தலம்.  இமயமலையில் கார்வாலில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3300 மீட்டர் (10800 அடி) உயரத்தில் யமுனோத்ரிக்கு மேல் 4400 மீட்டர் உயரத்திலுள்ள சம்பஸார் கிளேசியரிலிருந்து தன் நீண்ட பயணத்தைத் துவங்கும் யமுனை, இமயமலைச் சாரலில் பல இடங்களைத் தன் மென்மையான கரங்களால் தழுவியபடியே நிதானமாக, அமைதியாக, அழகாக, ஆரவாரமின்றிச் சென்றுகொண்டிருக்கிறாள். அந்த யமுனோத்ரியே  யமுனையின் ஆலயம் அமைந்துள்ள சார்தாம்களில் ஒன்று. அசீத முனிவர் நாள்தோறும் கங்கையிலும் யமுனையிலும் குளித்துத் தவம் செய்யும் வாழ்வை மேற்கொண்டவர். அவருடைய முதுமைக் காலத்தில் அவரால் கங்கோத்ரி செல்ல முடியாததால் கங்கை நதியே அவருக்காக யமுனோத்ரியாக வந்ததாக நம்பப்படுகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலமான யமுனோத்ரி, ரிஷிகேஷிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் இருக்கிறது. டேராடூன், முசோரி, பார்கோட் வழியாக ஜானகிபாய் சட்டி என்ற இடம் வரையில் தான் பேருந்து செல்லும். பின்னர் அங்கிருந்

சார்தாம் யாத்ரா..9

படம்
  கங்கோத்ரி தாம் கங்கை நதியின் பிறப்பிடமான கங்கோத்ரி கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3400 மீட்டர் (11,200 அடிகள்) உயரத்தில் அமைந்திருக்கிறது. பகீரதனின் தவத்தால் பூவுலகிற்குள் நுழைந்த கங்கை இங்கே பாகீரதியாகவே தோன்றுகிறாள். பின்னர் தேவ பிரயாகையில் அலக்நந்தா நதியுடன் சங்கமித்த பிறகுதான் கங்கை என்கிற பெயரைப் பெறுகிறாள். கங்கோத்ரிக்கும் மேலே 4255 மீட்டர் உயரத்தில் இருக்கும் 'கௌமுக்' என்கிற இடத்திலிருந்துதான் கங்கோத்ரி என்னும் க்ளேசியரிலிருந்து உற்பத்தியாகிறது பாகீரதி. கௌமுக்கை அடைய ஒற்றையடிப்பாதை கூடக் கிடையாது. கௌமுக்கையும் கடந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் மேரு-கங்கோத்ரி. தேவப்பிரயாகையில் அலக்நந்தாவுடன் சங்கமிக்கும் வரை மிகவும் ஆக்ரோஷமாக நுரைத்துக் கீழிறங்கி, கற்கள் மணல் என்று அனைத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு மணலின் வண்ணத்திலேயே ஓடுகிறது பாகீரதி. போகும் வழியெங்கும் பாகீரதியின் ஆக்ரோஷமான ஓட்டம். பாதையெங்கும் மலைச்சாரல்கள், பள்ளத்தாக்குகள் என்று பார்க்குமிடமெல்லாம் பச்சைப் பசேல் என்று பசுமையின் அழகு. எழிலுடன் பகட்டாக வலம் வந்த பாகீரதி  வெண்மையான கூழாங்கற்களை அள்ளிக்கொண்டு வெள

மேல்நாட்டு மருமகள்!

படம்
  #wtwகதைஎழுது #wtwstories2021 #June1 மேல்நாட்டு மருமகள்! குடந்தை அருகில் பட்டீஸ்வரத்தில் வாஞ்சிநாதன் ஒரு மிராசுதார். அப்பா விஸ்வநாதன் மறைவுக்கு பின்  நிலங்களை நன்கு பராமரித்து விவசாயம் சிறப்பாக செய்து வந்தார். ஊரில் பெரிய மனிதர். பக்திமான். ஆலயங்களில் எந்த விழா நடந்தாலும்வாஞ்சி நாதன்தான் முதலில் ஆரம்பித்து வைப்பார். அவரது ஒரே பிள்ளை வேணு  சென்னையில் வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார். அவர் அம்மா சுப்புலட்சுமிக்கு எண்பது வயதுக்கு மேல் ஆனாலும் எந்த நோயுமின்றி திடமாக இருப்பதோடு மடி ஆசாரம் அதிகம். மாட்டுப்பெண் விசாலம் எல்லோரையும் அனுசரித்து செல்பவள். வாஞ்சிநாதனின் தம்பி  ராமநாதன் மேல்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றவர் அங்கேயே வேலை கிடைத்து அமெரிக்கவாசியாகி விட்டார். அவர் மனைவி குடந்தையை சேர்ந்தவள். பிள்ளை ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள். பிள்ளை சதீஷ் இன்ஜினியரிங் படித்து அங்கேயே நல்ல வேலை. பெண் ஷ்ரேயா கல்லூரியில் படிக்கிறாள். சுப்புப்பாட்டிக்கு அமெரிக்க பிள்ளை மேல் கூடுதல் பாசம் உண்டு. அவன் அமெரிக்கா வில் வாழ்வது பிடிக்காமல் இங்கு வரும்படி சொல்லுவார். அவரது குழந்தைகள் அந்த

சார்தாம் யாத்ரா..8

படம்
  ஓம் நம: சிவாய🙏 ஹெலிகாப்டரில் ஏறி கேதார் தலத்தை அடைந்தோம். இனி ஈசனின் பெருமைகளை அறிவோம். உத்தர்கண்ட் மாநிலத்தில் ருத்ரப் பிரயாகை மாவட்டத்தில் கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3500 மீட்டர்கள் (11,700 அடிகள்) உயரத்தில் இமயமலைச்சாரலில் அமைந்துள்ளது கேதார்நாத் ஆலயம். 22,850 அடி உயரத்தில் 'மஹாபந்த்' எனப்படும் பனிச்சிகரத்தின் வாயிலில் இருக்கிறது கேதார்நாத். சுமேரு பர்வதம் என அழைக்கப் படுகிறது. நர-நாராயணர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் தவமிருந்து, மண்ணால் ஆன லிங்கத்தை வைத்துப் பூஜை செய்தபோது பிரசன்னமான சிவபெருமான், அவர்கள் விருப்பத்திற் கிணங்க ஜோதிர் லிங்கமாக கேதாரநாதராக அங்கேயே தங்கிவிட்டதாகச் சிவபுராணம் கூறுகிறது. அருகில் மந்தாகினி நதி அமைதியாக ஓடுகிறது. மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள்  பின்னால் சுமேரு பர்வதம் எனப்படும் மலைத்தொடர்கள்.  திருவானைக்காவலிலும், காஞ்சிபுரத்திலும் தேவியினுடைய உக்ரத்தை ஸ்ரீசக்ர யந்திரம் ஸ்தாபித்து அவளை ஸாந்தஸ்வரூபியாகச் செய்த  ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில்  உருவாக்கப்பட்ட கற்கோயில் ஓங்கி உயர்ந்த விமானத்துடன் கலையம்சத்துடன் எழிலாகக் காட்சி தருகிறது. இரண்டு பக்

சார்தாம் யாத்ரா..7

படம்
முக்தித் தலம் கேதார்நாத் நாங்கள் பத்ரிநாத், மனா கிராமம்,பஞ்சபத்ரி, ஜோஷிமட், வசிஷ்டர் ஆசிரமம் (இவை பற்றிய விபரம் பின்னால் எழுதுகிறேன்.) ஆகியவற்றை தரிசனம் முடித்தபின் குப்தகாசி சென்று தங்கினோம். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்ல வேண்டும்.  இன்னொரு வழி சூரிய சந்திரர்கள் வழிபட்ட கௌரிகுண்ட் வழியாக சென்றால் குதிரை, டோலி அல்லது நடைப் பயணமாக 14கி.மீ. மேலே ஏறிச் செல்ல வேண்டும். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. இறைவனின் பாகம் வேண்டி அம்பிகை தவம் செய்த இடம் இது. பிருகு முனிவர் கைலாயம் சென்றபோது சிவனை மட்டும் வழிபட எண்ணி இருவர் இடையே நுழைந்து வந்தபோது, தன்னை அவர் அவமதித்ததாக எண்ணிய அன்னை சிவபெருமானின் உடலில் பாதி பாகம் வேண்டி இங்குள்ள  கௌரிகுண்ட் என்ற இடத்தில் தவமிருந்தாள். ஈசனும் அவளைத் தன்னில் பாதியாக்கிக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அதன் அருகிலுள்ள திரியுகி நாராயண் என்ற இடத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த ஹோமகுண்டத்தில் மூன்று யுகங்களாக இன்னமும் அக்னி அணையாமல் இருக்கிறதாம். நாங்கள் ஹெலிகாப்டரில் சென்றதால் அங்கு செல்லவில்லை. குப்தகாசி ஹெலிபேடில் ஹெலி காப்டர்கள் வருவதும் போவத

சார்தாம் யாத்ரா..6

படம்
பத்ரிநாதனே சரணம்🙏 'பத்ரிநாதனைச் சரணடைந்தால், அவர் அவனுடைய பாவங்களைப் போக்கி மோக்ஷம் தருகிறார்.  ஐந்து தீர்த்தங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தப்த குண்டம், நாரதகுண்டம், கூர்ம தாரா, பிரகலாததாரா, ரிஷிகங்கர் என்று ஐந்து ஆறுகள் உள்ளன. கூர்ம தாரா எனும் தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.  தப்த குண்டம் வெந்நீர் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தே  பத்ரிநாதரை வலம் வந்து தரிசிப்பது ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தருவதாக பத்ரி நாதரே கூறியுள்ளார்' என்று வசிஷ்ட முனிவர் தெரிவிக்கிறார்.  தப்த குண்டம் வந்ததற்கும் ஒரு கதை உண்டு! அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டதால் ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணு பகவானிடம் வேண்டினார். விஷ்ணு பகவான், அக்னியை தண்ணீராக மாறச் செய்து, அதில் பக்தர்கள் நீராடினால் அவர் பாவமெல்லாம் தீரும் என்றும், அதேபோல் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார். அதன் பின்பே அக்னி பகவான், நாராயணரின் பாதங்களிலிருந்து நீர் ஊற்றாக உருவானதே  தப்த குண்டம்  என்கிறது புராணம். கங்கையை பூமிக்கு கொண்டு வந்த ப

சார்தாம் யாத்ரா..5

படம்
பாவம் போக்கும் பத்ரிநாத் சார்தாம் யாத்திரையில் முக்யமான தலம் பத்ரி நாராயணன் தவக் கோலத்தில் அருட்காட்சி தரும் பதரியாச்ரமம் எனப்படும் பத்ரிநாத். இது 99வது திவ்யதேசம். அஷ்டாக்ஷர மந்திரத்தை உலகுக்கு உபதேசிக்க பெருமாள் வந்த இடம்.  அலகநந்தா நதிக் கரையின் வலது கரையில் நர நாராயணச் சிகரங்களுக்கு இடையே உள்ளது தொன்மை வாய்ந்த பத்ரிநாத் ஆலயம். திருக்கோயிலுக்குப் பின் புறம் உயர்ந்த நீலகண்ட சிகரம் காணப்படுகிறது பத்ரிநாத், உத்தர்கண்ட் மாநிலம் சமோலியிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கிறது. இங்கு செல்ல நான்கரை மணிநேரம் ஆகிறது. பாதை மிக மிக மோசமாக உள்ளது. ஒரே பாதைதான், அதுவும் ஒரு பஸ் செல்லும் அளவுதான் உள்ளது. இந்தப் பாதையில்தான் இருவழிப் பயணங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.   வாகன ஓட்டுனர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பக்கம் அதலபாதாளமும், ஒரு பக்கம் உயர்ந்த மலைச்சாரல்களும் என்று இந்தச் சாலை ஓட்டுனர்களுக்கு  மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எங்கள் ஓட்டுனர் முகமதியர். மிக அருமையாக ஓட்டினார். பள்ளத்தாக்குகளின் பக்கம் ஓரமாக பஸ் செல்லும்போது நமக்கு கதி கலங்குகிறது

சார்தாம் யாத்ரா..4

படம்
  சார்தாம் யாத்ரா..4 சரஸ்வதி நதியின் தோற்றம் சரஸ்வதி நதியைக் காண நம் மனம் ஆவலாகிறது. இங்குதான் சரஸ்வதி நதி தோன்றுகிறது.இரு மலைகளுக்கிடையே அலை மோதி ஆர்ப்பரிக்கும் நதியாக வெளிவருகிறது. ஓ.... என்கிற சப்தம் மட்டும் கேட்கும் அமைதியான சூழ்நிலையில், நாம் நிற்கும் இடத்திலிருந்து சற்றே கீழே, நம்மால் நெருங்க முடியாத ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானம். ஆக்ரோஷத்துடன் ஆரவாரமாக சற்றே ஆணவத்துடன் கண்ணைப் பறிக்கும் வெண்ணிறத்தில் அதிவேகமாக கிளம்பும் சரஸ்வதி பிரமிக்க வைக்கிறாள். இவளின் மறைவுக்கு காரணம் யார்? ஒரு சுவையான புராண சம்பவம்!மகாபாரதம் எழுதுவதில் ஈடுபட்டிருந்த விநாயகர், ஆர்ப்பரிக்கும் நதியை அமைதியாகச் செல்லும்படிக் கூறினார். ஆனால் சரஸ்வதி நதியோ, அகம்பாவம் கொண்டு மேலும் பேரொலியுடன் ஆர்ப்பரித்தாள். அதனால் கோபமுற்ற விநாயகர்...நதியே நீ கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போவாய், உன்பெயரும் மறையும்...எனச் சாபமிட்டார். தன் நிலை உணர்ந்த சரஸ்வதி நதி, தன்னை மன்னிக்குமாறு பணிந்து வேண்டினாள். கஜமுகனும் நதியின் மீது கருணை கொண்டு...நதியே!நீ இங்கு மறைந்து, கங்கையும், யமுனையும், சங்கமம் ஆகு

சார்தாம் யாத்ரா..3

படம்
  மகாபாரதம் பிறந்த இடம்! (மனா கிராமம் பத்ரிநாத்) ஹரித்வாரில் ஷாப்பிங் மிக அருமை. படா பஜார் என்ற இடத்தில் பலவிதமான கைவினைப் பொருட்கள், அழகிய கைப்பைகள், ஸ்வெட்டர்கள், ராதா கிருஷ்ண விக்ரகங்கள், அவற்றிற்கான அழகான உடைகள் எல்லாம் நியாயமான விலையில் கிடைக்கிறது. Imitation jewelleryகளும் அழகான டிசைன்களில் விற்கப்படுகிறது. எல்லா இடத்திலும் bargain செய்து வாங்கலாம்!  இருபது ரூபாய் விலையில் பல வண்ணங்களில் கிடைக்கும் மணிமாலைகள் மிக அழகு. எந்த டிரெஸ்ஸுக்கும் பொருந்துகிறது. என் புடவை கலர்களுக்கு ஏற்றபடியும் என் பேத்திகளுக்கும்  நிறைய வாங்கினேன்! ஹரித்வாரிலிருந்து நேராக பத்ரிநாத் சென்றோம். 10000அடிக்கு மேல் அமைந்துள்ளதால் குளிர் நடுக்கி எடுத்து விட்டது. ஸ்வெட்டர் ஷால் கோட் எல்லாம் போட்டும் அடங்காத குளிர்!  பத்ரிநாத் ஆலயத்தில் மாலையில் நடைபெறும் விஷ்ணுசகஸ்ரநாம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் நாங்கள் இரவு  தங்கிவிட்டு காலை மனா கிராமத்திற்கு சென்றோம். இது இந்தியாவின் கடைசி கிராமம்.  சரஸ்வதி நதியை நாம் எங்கும் காணமுடியாது. அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி கலப்ப

சார்தாம் யாத்ரா..2

படம்
  ரிஷிகேஷ் நாங்கள் முதலில் ஹரித்வார் சென்று தங்கி அங்கிருந்து பத்ரிநாத் சென்றுவிட்டோம். பத்ரியில் நாங்கள் தங்கும் ஹோட்டல் இரண்டு நாளில் மூடிவிடுவார்கள் என்றதால் அச்சமயம் ரிஷிகேஷ் தரிசிக்க முடியவில்லை. பிறகு எல்லா இடமும் தரிசித்து திரும்ப ஹரித்வார் வந்தபோது ரிஷிகேஷ் தரிசித்தோம். உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்வாரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.  சார்தாம் யாத்திரையின் துவக்கம் இங்கிருந்துதான். அடக்கமாக, அமைதியாக ஓடி வரும் கங்கைக்கரையில் அமைந்த அழகான நகரம். நகரெங்கும் யோகா மையங்கள். சிவானந்த சுவாமி ஆசிரமம் மிக அருமையாக உள்ளது.  அனைத்து நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கான சுற்றுலாப்பயணிகள்  வந்து இங்கே யோகா கற்றுச் செல்லுகின்றனர்.  'உலகின் யோகா தலைநகரம்'  என்று போற்றப்படுகின்றது.கீதா மந்திர் ரிஷிகேஷ் என்கிற மஹாவிஷ்ணுவின் பெயருக்கு இந்திரியங்களுக்கு அதிபர் என்று பெயர். ரைப்ய மஹரிஷி தன் புலன்களை அடக்கி இந்தத்தலத்தில் கடுந்தவம் புரிய, அவருக்கு ரிஷிகேஷ் நாராயணராக மஹா விஷ்ணு காட்சி தந்ததால் இத்தலம் ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.ஆதி சங்

சார்தாம் யாத்ரா.. 1. ஹரித்வார்

படம்
  சார்தாம் யாத்ரா.. 1. ஹரித்வார் இந்தியாவின் பல புண்ய க்ஷேத்திரங்களையும் தரிசித்த எனக்கும் என் கணவருக்கும் பத்ரி, கேதார் தரிசிக்கும் ஆவல் இருந்தது. ஆனால் அங்கெல்லாம் நிறைய மலை ஏற வேண்டும், போனி என்னும் குதிரைகளில் செல்ல வேண்டும், வானிலை சரியில்லாவிட்டால் தரிசனமே கிடைக்காது என்றெல்லாம் பலர் சொன்னதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டோம். 2019 அக்டோபரில் என் நாத்தனார் தன் உறவினர் களுடன் சார்தாம் யாத்ரா செல்வதால் எங்களையும் இணைந்து கொள்ளும்படி கேட்டார். பத்ரி, கேதார் நாதர்கள் எங்களுக்கு தரிசனம் கொடுக்க மனம் வைத்ததால் கொஞ்சம் தயக்கத்தோடும், அதிக பயத்துடனும் இணைந்து கொண்டோம். இறைவன் எங்களை ஆட்கொண்டு அருளியதை  இப்போது எங்களால் உணர முடிகிறது. 2020 பிப்ரவரி முதல் கொரோனா தாக்கம் ஆரம்பித்து இன்றுவரை தொடர்வதை நினைக்கிறேன். எங்களுடையது வருடத்தின் கடைசி ட்ரிப். தீபாவளிக்கு பின் குளிரினால் எல்லா ஆலயங்களும் மூடப்பட்டு பின் ஏப்ரலில்தான் தரிசனம் ஆரம்பிக்குமாம். எங்களுக்கு தரிசனம் கிடைத்ததை நினைத்து இன்றும் மெய்சிலிர்க்கிறது. இனி எப்போது அங்குள்ள ஆலயங்களை தரிசிக்க முடியுமோ? பத்ரி, கேதார், யமுனோத்ரி, கங்கோத

உனக்காகக் காத்திருக்கிறேன்..

படம்
  #wtwகதைஎழுது #wtwstories2021 #May2 உனக்காகக் காத்திருக்கிறேன்.. ஒவ்வொரு முறை மீனு சென்னையிலிருந்து தஞ்சைக்கு  பிறந்தவீடு செல்லும் போதும் கும்பகோணம் ஸ்டேஷனில் ரயில் நிற்கும்போது அவள் கண்கள் கலங்காமல் இருக்காது. இதை ஒருமுறை சந்த்ரு கவனித்து விட்டு கேட்டபோது கண்ணில் கரி விழுந்ததாக சொல்லி சமாளித்தாள். இன்றும் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டாள். அவள் அம்மாவழி தாத்தா வீடு குடந்தை. தாத்தாவுக்கு இரண்டு பெண்கள். அதன்பின் பல வருடம் கழித்து ஒரே பிள்ளை. இவள் அம்மாவுக்கும் அவனுக்கும் 13வயது வித்யாசம். அவள் அம்மா கமலா திருமணத் தின்போது தம்பி ரகுவிற்கு ஐந்து வயது. அவனுக்கு அம்மாவை விட அக்காவிடம் பாசம் அதிகம். அவளுக்கு திருமணமாகி சென்றபோது அவளை நினைத்தே அழுவான் என்பார் அவள் பாட்டி. அடுத்த வருடமே மீனா பிறந்து விட ரகுவுக்குதான் மீனா என்று அன்றே முடிவு செய்து விட்டார்கள். மீனாவின் சித்தி விமலாவுக்கு புக்ககம் மும்பை. அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவளால் அடிக்கடி அம்மா வீடு வரமுடியாது. கமலாவுக்கு தஞ்சை என்பதால் நினைத்தால் அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள். ரகுவுக்கு மீனாதான் என்று முடிவானதால் அவர்களுக்கு