இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கீதை எனும் புண்ணிய நூல்🙏🏼

படம்
  குருக்ஷேத்திரம் பற்றி எழுதிவிட்டு கீதை பற்றி எழுதாமல் முழுமை அடையாது. இறைவனின் திருஅவதாரங்கள், மஹான்கள் தோன்றிய தினத்தையே 'ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது போல் பகவத்கீதைக்கு மட்டுமே ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. 26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், 'கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிக்கிறது. முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும்  இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார். கடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்ததே 'பகவத் கீதை' கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை: வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை.  இந்த  தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநா

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்..

படம்
  தினமும் கிருஷ்ண ஜயந்திதான்! ஸ்ரீமத் பாகவத ரஹஸ்யம் படித்துக் கொண்டிருந்த போது அதில் கிருஷ்ண ஜயந்தியைப் பற்றிய பாகம் மிக அருமையாக இருந்தது. பாகவத ரகஸ்யம் படிக்கப் படிக்க திகட்டாத தேன்! ஒவ்வொரு வரியிலும் பக்தி ரஸம் ததும்புகிறது.  நான் பெற்ற இன்பம் அனைவரும்பெறும் ஆசையில் அதில் சிலவற்றைத் தொகுத்து எழுதியுள்ளேன். நந்த மஹோத்சவம் மகிழ்ச்சி விழா. தினமும் கொண்டாட வேண்டும். ஜனங்கள் வருஷத்தில் ஒரே நாள்தான், ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 5½ மணி வரை தினமுமே நந்த மஹோத்சவம், பாலகிருஷ்ணன் பிறந்த தினம் கொண்டாடுங்கள். பகவான் எழுந்தருளும் தினமே விழா நாளாகும். விழாவிற்குப் பணம், காசு தேவையில்லை. அதற்கு அன்பே முக்கியம். கிருஷ்ண ஜயந்தியை ஆலயங்களில் கொண்டாடினால் போதாது. நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் விழா கொண்டாட வேண்டும். ஜீவாத்மாவின் இருப்பிடம் நம் சரீரமேயாகும். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவது என்றால் அப்பம், வடை, அவல் வெண்ணெய் விநியோகிப்பதல்ல. தயிரும், பாலும் கொடுப்பதா? இதெல்லாம் வேண்டுமென்பதில்லை. விழாவை மனதில் (இதயத்தில்) கொண்டாட வேண்டும். மனிதன் தன் உடல் உணர்ச்சியற்றி

தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..6

படம்
  பத்ரகாளி ஆலயம் இங்குள்ள தேவிகூப் பத்ரகாளி ஆலயம் ஒரு சிறந்த சக்தி பீடமாகும். தட்ச யாகத்தின்போது, சிவன் சுமந்து திரிந்த சக்தியின் உடலை மகாவிஷ்ணு தன் சக்கரத்தால் சிதைத்த போது, சக்தியின் வலது முழங்கால் பாகம் இங்குள்ள ஒரு கிணற்றில் விழுந்ததாம். அந்த இடமே அரியானாவின் ஒரே சக்தி பீடமாக விளங்கும் பத்ர காளி ஆலயம். அன்னை கருணைக் கண்களோடு, அண்டினாரை ஆட்கொள்ள ஆண்டாண்டு காலமாய் நின்று கொண்டிருக்கும் காட்சி கண்களை நிறைக்கிறது. அன்னையின் பாதம் விழுந்த கிணற்றை நன்கு பராமரித்து, அதன் மேல் ஒரு தாமரையைச் செய்து அன்னையின் பாதத்தை பளிங்கினால் செய்து வைத்துள்ளார்கள். மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பின், காணிக்கை யாக இங்கு தங்கக் குதிரை செய்து வைத்தாராம் கண்ணபிரான். கடவுளே வேண்டிக் கொள்ளும் போது சாமானியரான நாம் எம்மாத்திரம்? வேண்டிக் கொண்டவை நிறைவேறி யதன் அடையாளமாக ஏகப்பட்ட மண் குதிரை பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குட்டிக் கண்ணனுக்கு முடியிறக்கும் விழா இங்குதான் நடந்ததாம். கோவில் மிகச் சிறியதாகக் காணப்பட்டாலும் அற்புத சக்தி உள்ள ஆலயம். குருக்ஷேத்திரம் இந்துக்களுக்கு மட்டுமின்றி, சீக்கியர்களின் பு

தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..5

படம்
  குருக்ஷேத்ரத்தில் இன்னும் பல ஆலயங்கள் உள்ளன. ஹர்ஷரின் மூதாதையரால் கட்டப்பட்ட ஸ்தானேஷ் வரிலுள்ள மகாதேவ் ஆலய நீருக்கு குஷ்ட ரோகத்தை குணப்படுத்தும் சிறப்பு உண்டாம். கோவில் மிக அழகாக உள்ளது. பாண்டவர்கள் போருக்கு முன் இச்சிவபெருமானை வணங்கி ஆசி வேண்டிச் சென்றார்களாம். இங்குள்ள தீர்த்தங்களில் சூரிய கிரகண சமயம் நீராடுவது மிக விசேஷமாகக் கூறப்படுவது, சூரிய கிரகணத்துக்கும், பாரதப் போருக்கும் உள்ள சம்பந்தத்தால் மட்டுமல்ல; (அர்ச்சுனன் உயிரை சூரிய கிரகணத்தின் மூலம், சூரியன் அஸ்தமனமாகி விட்டதாக கவுரவர்களை எண்ண வைத்து கிருஷ்ணன் காப்பாற்றியது நாம் அறிந்ததே) அதற்கு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ராமர் தனது தாய்மார்கள், சீதையுடன் வந்து பிரம்மசரோவரில் நீராடியதாக புராணம் கூறுகிறது. கிருஷ்ணர் குருக்ஷேத்திரத்துக்கு சிறு வயது முதலே அடிக்கடி வருவாராம். துவாரகையிலிருந்து கண்ணனும், பலராமனும், கோகுலத்திலிருந்து நந்தகோபன், யசோதை, கோபியர்களும் இவ்விடத்தில் சந்திப்பார்களாம். ராதையும், கண்ணனும் சந்தித்து மகிழ்ந்தது குருக்ஷேத்திரத்தில் தானாம். 1567-ல் பேரரசர் அக்பர் சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்திரம

தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..3

படம்
  அடேயப்பா! இவ்வூரில் கால் வைத்த இடமெல்லாம் ஆலயங்கள். கண் திரும்பிய இடமெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள். ஒவ்வொரு தீர்த்தமும் எத்தனை பிரம்மாண்டமானவை. பார்க்கும்போதே பிரமிக்க வைக்கின்றன. கி.பி. 11-ம் நூற்றாண்டில் ‘அல்பெருனி’ என்ற அறிஞரால் ‘கிதாப்-உல்-ஹின்ட்’ என்ற நூலில் ‘ஒரு பெரிய கடல் போன்று காணப்படுவதாக’ எழுதப்பட்ட , பிரம்மசரோவர் 3860 அடி நீளமும், 1880 அடி அகலமும் கொண்டது. படைப்புக் கடவுள் பிரம்மாவினால் உண்டாக்கப்பட்ட இத்தீர்த்தத்தில் சூரிய கிரகணத்தன்று உலக முழுவதிலிருந்து மக்கள் புனித நீராடுவதற்கென்று இங்கு வருகிறார்களாம். பதினைந்து லட்சம் பேருக்கு மேல் புனித நீராடுவதாகக் கூறப்படுகிறது. இப்புனித பிரம்ம சரோவர் குளத்தில் நீராடினால் அக உடலும், புற உடலும் தூய்மையாகும் எனபது நம்பிக்கை. இக்குளத்தின் நடுவில் சர்வேசுவர் மகாதேவ் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு செல்ல அழகான பாலம் ஒன்று உள்ளது. இம்மகா தீர்த்தத்தின் இரு கரைகளில் போரின் சமயம் பாண்டவ, கவுரவர்கள் தங்கியிருந்தார்களாம். இதன் வட திசையில் கவுரவ, பாண்டவ ஆலயம் உள்ளது. இக்குளத்தின் நடுவில் ‘புருஷோத்தம்புரா’ என்ற இடத்தில் ‘சந்த்ர கூப்’ எனும் கிணறு

தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..2

படம்
  குருவின் தியாகத்தை மெச்சிய விஷ்ணு அவருக்கு இரு வரங்கள் கொடுப்பதாய் சொல்ல, குருவும், ‘கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கப்போகும் இந்நகரம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்றும், இங்கு இறப்பவர்கள் எத்தனை பாவம் செய்திருப்பினும், மோட்சம் பெற வேண்டும்’ என்றும் கேட்டார். கேடு செய்வோர்க்கும், வீடு பேறு தரும் நோக்கத்தில்தான் காக்கும் தெய்வம் கண்ண பரமாத்மாவும் போர் நடத்த இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார் போலும். என்னே இறைவனின் கருணை! சரஸ்வதி, திருஷத்வதி என்ற இரு நதிகளுக்கிடையே அமைந்திருந்ததாம் இந்த நகரம். ஆனால் இந்த இரண்டு நதிகளுமே இன்று மறைந்து விட்டனவாம். பிரம்மக்ஷேத்ரா, பிருகு க்ஷேத்ரா, ஆர்யவரட், சமந்தபஞ்சக் என்ற பெயர்களைக் கொண்ட குருக்ஷேத்திரம் மகாபாரத காலத்தில் ‘பஹூதான்யகா’ (வளமையான நகரம்) என்ற பெயரைக் கொண்டிருந்தது. ஆரியர்கள் காலத்திற்குப் பின் நலிவடைந்த குருக்ஷேத்திரம் ஹர்ஷரின் ‘பொற்கால ஆட்சி’யில் மிகச் சிறப்புப் பெற்று, கல்வி, கேள்விகளில் சிறந்து தலைநகரமாக விளங்கியது. நாட்டு மக்கள் விருந்தோம்பல், நன்னடத்தை, அறிவு, பண்பில் சிறந்து விளங்கியதாகவும், தலைநகர் மிகப் பெரிய கடை வீதிகள், பள்ளிகள்,

தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரம்..1

படம்
  தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரம்..1 ஹரே கிருஷ்ணா 🙏🏼 வரும் திங்கள் 30.8.'21 அன்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி. கண்ணனை நினைக்கும்போதே அவன் அழகும், விஷமங்களும், லீலைகளும் கூடவே ராதையும், பகவத்கீதையும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. கண்ணனிடம் ஆசை இல்லாதவர் எவரேனும் உண்டோ? ஸ்ரீ கிருஷ்ணன் கீதை சொன்ன குருக்ஷேத்திரம் செல்வோமா! தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரம்..1 தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:। மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் இது. கண் பார்வையில்லாத திருதராஷ்டிரர் ஸஞ்சயனிடம் தர்ம பூமியான குருக்ஷேத் திரத்தில் கூடியுள்ள என்னுடையவர்களும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்'எனக் கேட்கிறார். கண்ணனை நினைக்கும் போதே நம் நினைவில் தோன்றுவது கோகுலம், மதுரா மற்றும் குருக்ஷேத்திரம். ‘தர்ம யுத்தம்’ எனப்பட்ட மகாபாரதப் போர் நடந்த ‘தர்ம க்ஷேத்ரம்’ எனப் போற்றப்பட்ட புண்ணிய பூமி குருக்ஷேத்திரம். உலகிற்கு பக்தி, கடமை, தர்மம், ஞானம் இவற்றை எடுத்துச் சொன்ன கிருஷ்ண பரமாத்மாவின் திருவாக்கிலிருந்து உபதேசித்த பகவத் கீதை பிறந்த புண்ணிய பூமி. இந்திய தலைநகரான டெல்லி

கங்கை நதிக் கரையில்..1

படம்
 #wtwstories2021 #wtwகதைஎழுது #june2 #Story1 தாமதமாகக் கதை எழுத மன்னிக்கவும். பாதி எழுதி வைத்து வேலை அதிகமானதால் கதையை முடிக்க முடியவில்லை. இது தனித்தனி கதை இல்லை. தொடர்கதை. கங்கை நதிக் கரையில்..1 சுந்தரேசனும் சாரதாவும் இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் வசித்து வந்தனர். சுந்தரேசனின் அத்தை பெண் சாரதா. மனமொத்த தம்பதிகள்.  9 வயது மீனாவும், 6  வயது மகேஷுமாக இரண்டு குழந்தைகள். சில வருடங்களுக்கு முன்பு இறந்த சுந்துவின் (சுந்தரேசனின் சுருக்கம்!) தந்தை காசி  போக மிகவும் ஆசைப் பட்டும் போகமுடியவில்லை. அவரது ஆசையைப் பூர்த்தி செய்ய காசிக்கு செல்ல ஏற்பாடுகளை செய்தார்.  சென்னை வரை ரயிலில் சென்று அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு. கிளம்பும்போது அவர்கள் வீட்டு பசு காமாட்சியும் கன்றுக்குட்டி பாருவும் கம்பி வழியே கண்ணீரோடு வருத்தமாக பார்த்தது. 'பத்து நாளில் வந்துடுவோம் ஜாக்கிரதையா இரு' என்று மீனா அதைத் தடவி முத்தமிட்டு வந்தாள். அங்கு காசி அலகாபாத் கயா எல்லா இடமும் சென்று பித்ரு காரியங்களை முடித்தனர்.'ஹே கங்கே..என் தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்து விட்டேன். என்னைக் காப்பாற்று' என்று

வரம் தரும் வரலட்சுமி 🙏வரம் தரும் வரலட்சுமி 🙏

படம்
  #wtwstories2021 #wtwகதைஎழுது #August1 வரம் தரும் வரலட்சுமி 🙏 பத்மா, பவானி, தனு மூவரும் சிவகாமி வீட்டு வரலக்ஷ்மி நோன்பிற்கு செல்லக் கிளம்பினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிவகாமி வீட்டு வரலக்ஷ்மி நோன்பைக் காண கண் கோடி வேண்டும். விதவிதமான பூக்களும் பழங்களும் வைத்து அவள் செய்யும் பூஜைக்கு அத்தனை தோழிகளையும் கூப்பிடுவாள். இந்த முறை பவானி, தனு, பத்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன். பத்மா தன் வீட்டு தேங்காய்களைக் கொண்டு வந்தாள். தனு அவள் வீட்டு சிவப்பு ரோஜாக்களையும், பவானி மஞ்சள் ரோஜாக்களும் பூஜைக்கென கொண்டுவர, நான் என் வீட்டு ரோஜா, மல்லி, நித்யமுல்லை, அரளி பூக்களுடன் பூஜைக்கு சென்றோம். செல்லும்போது அந்த விரதம் பற்றி பேசிக் கொண்டு சென்றோம். இந்த விரதம் ஏன் செய்கிறோம் முதலில் செய்தது யார் என்று பவானி விளக்கமாகக் கூறினாள். 'நாம் விரதமிருக்கும் வரலக்ஷ்மி யாலேயே சொல்லப்பட்ட விரதம் தான் இது.  அதோடு அவளையே உருவாக்கி தன் முன் வைத்து விரதம் அனுசரிப்பதும் இதில் விசேஷம்', என்று நான் சொல்ல தோழிகள் கதையைக் கேட்க ஆர்வமானார்கள். மகத தேசத்தில் குண்டினபுரத்தில் வாழ்ந்த  சாருமதிக்கு திருமணமானதும்

புத்ரதா ஏகாதசி..(18.7.2020)

படம்
  மக்கட்செல்வம் அருளும் புத்ரதா ஏகாதசி.. (18.7.2020 ) மனிதர் எவருமே பாவிகளாகப் பிறப்பதில்லை. நாம் முற்பிறவி யில் செய்த வினைப்பயனா லேயே மறுபிறவி ஏற்படுகிறது. எத்தனை செல்வம் இருந்தாலும் செல்வங்களில் உயரிய மக்கட் செல்வம் இல்லை என்றால் மற்ற செல்வங்கள் அனைத்தும் வீண் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த மக்கட் செல்வம் வேண்டுவோர் வழிபட வேண்டிய விரதமாகக் குறிப்பிடப்படுகிறது நாளைய பவித்ரோபனா அல்லது புத்ரதா ஏகாதசி. ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே புத்ரதா ஏகாதசி. இந்த ஏகாதசியின் சிறப்புகளை யுதிஷ்டிரன் கேட்க அதற்கு பகவான் கிருஷ்ணர் பதில் கூறுகிறார். துவாபர யுகத்தில் மஹிஷ்மதிபுரி என்னும் ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த மன்னன் மஹிஜித்திற்கு அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தும் தனக்குப் பின் தன் ராஜ்ஜியத்தை ஆள ஒரு வாரிசில்லையே என்று . மஹிஜித் கவலையுற்றான். 'தான் தர்மம் தவறாது இருந்தும் தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது' என்று தன் நாட்டிலிருந்த அறிஞர்களை எல்லாம் அழைத்துக் கேட்டபோது அவர்கள் முனிவர் லோசமரைச் சரணடைந்து கேட்டால் வழி பிறக்கும் என்று கூற,  அவரை சந்தித்து விடை அறிந்துவரும்படி கூறினான்.

யோகினி ஏகாதசி🙏🏼

படம்
  இன்று யோகினி ஏகாதசி. ஆடி மாதத்து  தேய்பிறை ஏகாதசிக்கு ‘யோகினி’ என்று பெயர். குஷ்ட ரோகத்தை நீக்கும் ஏகாதசி இது.யோகினி ஏகாதசி விரதம் வாழ்க்கையில் செல்வத்தையும் மகிழ்ச்சி யையும் தருகிறது. அக நோய் மட்டுமல்லாமல் உடல் நோயையும் போக்கும் யோகினி ஏகாதசியின் பெருமையை விளக்கும்  புராண சம்பவம் இது. குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை. பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில்  "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான். ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன் மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள். அவர் "யோகினி ஏகாதசி''யை அவர்களுக்கு உபதேசித்தார். அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்த ஹேமமாலி

ஆஷாட ஏகாதசி

படம்
  ‘ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு மாதத்தில் இருமுறை வரும் ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அப்படி ஆஷாடமாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர்.இது ஆடியில் வருவதாலும் பாண்டு ரங்கனைத் துதிக்கும் சிறப்பாலும் ஆஷாட ஏகாதசி  என்று பெயர்.  சயனம் என்றால் உறக்கம். தேவர்களும் மகாவிஷ்ணுவும் உறங்கச் செல்லும் நாள் தேவசயனி ஏகாதசி. இந்த நாளில்  யோக நித்திரை கொள்ளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியிலிருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. இந்த ஏகாதசி ஆஷாட ஏகாதசி எனவும் போற்றப்படுகிறது. பண்டரிபுரத்தில் காட்சி தரும் பாண்டுரங்கனை தரிசிப்பது புண்யம் தரும் என்று கூறப்படுகிறது. ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூலில் பகவான் கிருஷ்ணரே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் போற்றிக்கூறியிருப்பதால்,   கிருஷ்ண பரமாத்மாவின் காலத்துக்கு முன்பாகவே ஏகாதசி விரதங்கள் புகழ்பெற்று விளங்கினதாக அறியப் படுகிறது.  சூரிய வம்சத்தில் பிறந்த மன்னன் மாந்தாதா.அவன் ஆட்சியில் நாடு சுபிட்சமா

பூரி ஜகந்நாதர்..5

படம்
ரத யாத்ரா சமயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நடந்த சம்பவம் இது... அதாவது நேரடியாக சொர்க்கம் செல்ல விரும்பும் மக்கள், ரதயாத்ரா சமயம், ரதத்தின் சக்கரங்களடியில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததாம். இதிலிருந்தே ஆங்கிலத்தில் ‘JUGGERNAUT’ என்ற சொல் உருவாயிற்று என்கிறார்கள். இதிலிருந்தே இந்த விழாவின் பழமையும் சிறப்பும் உணரப்படுகிறது. #பூமியிலேயே வைகுண்டம்! இந்த ஆலயத்தில் மோட்ச வைகுண்டம் என்றொரு பகுதியுள்ளது. அது பகவானுடைய சமாதி என்று அங்குள்ளவர்கள் வர்ணித்தபோது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுபற்றி விசாரித்தோம். இங்குள்ள விக்கிரகங்கள் தாரு பிரம்மம் என்ற சிறப்பான வேப்ப மரத்தினால் ஆனவையாம். சிறிது காலத்தில் அவை பழுதடைந்து போய் விடும். அப்படி பழுதான விக்ரகங்களை சரி செய்வதை ‘ஸ்ரீ அங்கபீடா’ என்கின்றனர். எந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருமோ அந்த வருடத்தில் ஜகந்நாதரின் கட்டளைப்படி வேப்பமரம் தேர்வு செய்யப்படுகிறது. அந்த மரத்தை வைத்து புதிய விக்ரகங்களை விதிப்படி உருவாக்குகின்றனர். பழுதான விக்ரகங்களை இந்த மோட்ச வைகுண்டத்தில் புதைத்தும் விடுகின்றனர். #பூரிகோவில் அதிச

பூரி ஜகந்நாதர்..4

படம்
  பூரி மகாராஜா, தங்க விளக்குமாறால் ரதங்களை சுத்தம் செய்து, சந்தனம், பன்னீர் தெளித்தபின் மூன்று ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக, அழகாக ஆடி ஆடிச் செல்லுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்! ஜகந்நாதரின் ரதம் 44அடி உயரமும் 16 சக்கரங்களும் கொண்டு சிவப்பு, மஞ்சள் துணிகளால் போர்த்தப்பட்டிருக்கும். இதற்கு ‘நந்திகோஷ்’ என்று பெயர். பலராமரின் ‘தாளத்வஜா’ என்ற ரதம் 44 அடி உயரமும் 14 சக்கரங்களும் கொண்டு, சிவப்பு, பச்சைத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டும், சுபத்திரையின் தேர் 43 அடியும் 12 சக்கரங்களும் கொண்டு சிவப்பு, கருப்புத் துணிகளால் அலங்காரமும் செய்யப்பட்டிருக்கும். அதன் பெயர் ‘பத்மத்வஜா’. #4000பேர் இழுக்கும் பிரம்மாண்ட தேர்! இவ்வாறு ஏக அமர்க்களத்துடன், கம்பீரமாக, அசைந்தாடிச் செல்லும் மூன்று ரதங்களும், 4000 பேருக்கு மேற்பட்டவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, குண்டிச்சா கோயிலை அடையும். அரைகுறையாக இறைவனின் உருவங்கள் அமையக் காரணமான இந்த குண்டிச்சா தேவியை சமாதானம் செய்யவே மூன்று தெய்வங்களும் அவரது இருப்பிடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு 7 நாட்கள் தங்கியிருக்கும் சமயம், ஜகந்நாதர் கோயிலில் நடைபெறுவது போன்றே எல

பூரி ஜகந்நாதர்..3

படம்
பூரியில் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் ரதோத்சவம் உலகப் புகழ் பெற்றதாகும். இத்திருவிழா ஆடி மாதம் வளர்பிறை துவிதியை அன்று ஆரம்பித்து, திரயோதசி வரை நடைபெறும். அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று இறைவனை தரிசனம் செய்தால், மோட்சப் பதவி கிடைப்பது நிச்சயமான ஒன்று என்கின்றனர். மேலும் வாழ்க்கையின் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுவதால், ரதோத்சவம் சமயத்தில் பூரியில் பெருங்கூட்டம் கூடுகிறது! #மனைவிஉத்தரவுடன் ஊர்வலம்! ஆனி பௌர்ணமியன்று மூன்று தெய்வ உருவங்களுக்கும் ‘ஸ்நான யாத்ரா விழா’ என்ற பெயரில் குளியல் திருவிழா நடக்கும். பிறகு பதினைந்து நாட்கள் மூவரும் ஓய்வெடுப்பர். அச்சமயம் விக்ரகங்கள் படுத்த நிலையில் இருக்கும். பின் ஜகந்நாதருக்கு ஜூரம் கண்டு விடுவதால் தனியான ஒரு இடத்திலிருந்து சிகிச்சை பெறுவார். அப்போது பகவான், மஹாலக்ஷ்மியுடன் தனித்து இருப்பார். அதன்பின் தேவியின் உத்தரவுடன்தான் ரத யாத்திரைக்குக் கிளம்புவார். பின் ‘அந்தராகா’ என்ற பெயரில் கடவுளர் உருவங்களுக்கு புதிய வண்ணம் பூசி விடுகின்றனர். இதன் மூலம் விக்ரகங்கள் புதுப் பொலிவுடன் காணப்படும். இப்படி கண்கள் தவிர உடல் முழுதுக்கும் வண்ணம் பூசும்

பூரி ஜகந்நாதர்..2

படம்
பூரி ஆலயத்தின் மகிமை சொல்லில் அடங்காது. பிரமிப்பு ஏற்படுத்தும் அரண்மனை போன்று மகா பிரம்மாண்டமான ஆலயமாக அமைந்திருக்கிறது இது. கிழக்கே சிம்ம வாயில், மேற்கே வைராக்ய வாயில், வடக்கே யானை, தெற்கே குதிரை வாயில் என  நான்கு பெரிய வாயில்களைக் கொண்டது. இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர்களும் 713  அடி உயர கோபுரமும் ஒரிசாவின் மிகப் பெரிய கோபுரமாம். இது ராஜகோபுரம் இல்லை. மூலவரின் விமானமாகும்.இவ்வாலயம் 12ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் மகன் வயிற்று பேரன் சோடகங்கன் வம்சத்தாரால் உருவாக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.  ஆலயத்தினுள்ளே கணபதி, சிவன், அம்பிகை, மகாலக்ஷ்மி, புவனேஸ்வரி, சூரியன் ஆகியோருக்கு என்று அத்தனை தெய்வங்களுக்குமாக பல சந்நிதிகள் இருக்கின்றன. ஆலயத்தை முழுதும் தரிசிக்கவே சுமார் இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இவ்வாலயத்தை ராமதாஸர், ஹரிதாஸ், துளசிதாசர், மீராபாய் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இங்கு ஜகந்நாதருக்கு தினமும் 64 வகை உபசாரங்கள் நடை பெறுகின்றன.விதவிதமான அலங்காரங்களை செய்து பார்த்து மகிழ்கிறார்கள். 56 வகை  பிரசாதங்கள் செய்யப்படுகிறது. இந்த ஆலயம் மிகப் பெரிய சமையலறை கொண்டது. 24 அடுப்புகளும், 600 சமை

பூரி ஜகந்நாதர்..

படம்
இன்று பூரி ஜகன்னாதர் ரதோத்ஸவம். பூரி ஆலயம் பலரும் தரிசித்திருப்பீர்கள். இந்தப் புண்ணிய தினத்தில் ஜகன்னாதர் ஆலயம் பற்றி அறிவோம்🙏🏼 சகோதரஒற்றுமையை உணர்த்தும் பூரி ஜகந்நாதர் பூரி ரத்யாத்ரா..12.7.'21 சிவ ஸ்தலங்களை அடுத்து விஷ்ணு கோயில்களே நம் நாட்டில் அதிகம். இந்த விஷ்ணு ஸ்தலங்களில் மகாவிஷ்ணு தனியாகவோ அல்லது மனைவி மகாலட்சுமி சகிதமாகவோதான் காட்சியளிப்பார். ஆனால் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வித்தியாசமான ஒரு கூட்டணியில் காட்சியளிக்கிறார் மகாவிஷ்ணு. அண்ணன் பலராமன் மற்றும் தங்கை சுபத்ராவுடன்தான் இங்கே காட்சி தருகிறார் விஷ்ணு. உலகின் முக்கிய திருவிழா!கி.பி. 1200-ல் உருவாக்கப்பட்ட இந்த பூரி ஜகந்நாதர் ஆலயம், இந்தியாவின் நான்கு முக்கிய புனித ஸ்தலங்களுள் ஒன்று வடக்கே பத்ரிநாத், தெற்கே ராமேஸ்வரம், மேற்கே துவாரகாநாத் போல, கிழக்கே ஜகந்நாத் பூரிதான். மகாமகம், கும்பமேளா, மதுரை கள்ளழகர் திருவிழா, திருவாரூர் தேர்த் திருவிழா, மைசூர் தசரா என்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு முக்கியத் திருவிழா இருப்பது போல பூரியில் ரத யாத்திரை ரொம்ப ரொம்ப ஃபேமஸ். அரைகுறை விக்ரகங்கள்தான்! ஒரு விசேஷ

நாராயணீய மகிமை🙏🏼

படம்
  குருவாயூரைப் பற்றி எழுதிவிட்டு நாராயணீயம் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாயிற்றே!  குருவாயூர் என்றாலே கூடவே நினைவுக்கு வருவது நாராயணீயமும் அதை எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரியும்(1560 - 1632). குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனை முன்னிறுத்தி, பாகவதத்தின் சாரமாக, வட மொழியில் பக்தி சொட்டச் சொட்ட எழுதப்பட்ட கிருஷ்ண காவியமே ‘நாராயணீயம்.  இறையருளால் இளம் பிராயத்திலேயே அனைவரும் அதிசயக்கும் படியான அறிவு, ஆற்றல், பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தார் பட்டதிரி. அச்சுத பிஷரோடி இவரது குரு. தனக்கு இலக்கணம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கும் குரு  வாதரோகம் என்ற நோயினால் கஷ்டப்படுவதைக் கண்டு மனம் கலங்கிய பட்டதிரி தன் நன்றிக் கடனாக குரு தட்சணையாக குருவின் நோய் அவரை விட்டு விலகி தன்னைப்பற்றிக் கொள்ளட்டும் என்று கடவுளிடம்  வேண்டிக்கொண்டு தானே வலிய வரவழைத்துக் கொண்டார். துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரிடம்  அந்த நோய் நீங்கும்பொருட்டு செய்ய வேண்டியது யாதெனக் கேட்டார் பட்டதிரி. அவர் அறிவுறுத்தலின்படி,  குருவாயூர் தலத்திற்கு வந்து ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில் ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக்

குருவாயூருக்கு வாருங்கள்..11

படம்
  செம்பை வைத்யநாத பாகவதர் நாம் அனைவரும் அறிந்த பிரபலமான பாடகர். அவர் ஒருமுறை  திருச்செங்கோட்டில் ... பாவன குருபவன புராதீச மாஸ்ரயே...என்று கச்சேரி  செய்து கொண்டிருந்தபோது திடீரென்று குரல் வெளி வராமல் நின்றுவிட்டது. பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமடையவில்லை.  அச்சமயம் அவர் குருவாயூர் சென்று கண்ணனிடம்...உன் பெயரைப் பாடும்போதுதான் என் குரல் நின்றது. அதனைத் தொடர்ந்து பாட மீண்டும் குரலைக் கொடு. என் வாழ்நாள் முழுதும் கிடைக்கும் சம்பாத்தியத்தை உன் ஆலயத்திற்கு தருகிறேன்...என மனமிறைஞ்சிக் கதற, அவரது குரல் அக்கணமே  திரும்பக் கிடைத்தது.  இறுதிவரை சொன்ன சொல்லை நிறைவேற்றினார். ஆலயத்தில் அவரது திருவுருவப்படம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாத குருவாயூர் ஏகாதசி சமயம் நடக்கும் பத்துநாள் உற்சவம் 'செம்பை ஏகாதசி இசைவிழா' என்ற பெயரில் நடைபெறுகிறது. இது என்னுடைய அனுபவம். மூன்று வருடங்களுக்கு முன்பு  நன்கு பேசிக் கொண்டிருந்த என் கணவரின் குரல் திடீரென்று பேச முடியாமல் போய் விட்டது. தொண்டையில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று தொண்டைவலி மாத்திரைகளை சாப்பிட்டார். என் பெண்(டாக்டர்)ணிடம் கேட்டபோது அவளே திர

குருவாயூருக்கு வாருங்கள்..10

படம்
  வில்வமங்கலத்தின் நண்பரான மானதேவன் என்ற அரசர் தானும் கண்ணனைப் பார்க்க ஆசைப்படுவதாயும்,வில்வமங்கலம் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டினார். வில்வமங்கலம் ....கண்ணன் மறுநாள் விடிகாலை இலஞ்சி மரத்தடியில் விளையாடும்போது  நீங்கள் காணலாம். ஆனால் தொடக்கூடாது...என்றார்.  அதேபோல் மறுநாள் கண்ணன் விளையாடும்போது மன்னர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணனை ஆலிங்கனம் செய்து கொள்ள...நீ என்னைத் தீண்டுவாய் என்று வில்வமங்கலம் சொல்லவில்லை...என்றபடி  மறைந்து  விட்டார் கிருஷ்ணர்.  அணைக்கும்போது  கிருஷ்ணனின் மயிற்பீலி ஒன்று மன்னன் கையில் கிடைத்தது. அது இன்றுவரை நடைபெறும் கிருஷ்ணனாட்டத்தின் கிருஷ்ணனின் தலைகிரீடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மானதேவர் இயற்றிய 'கிருஷ்ணகீதி' என்ற கிருஷ்ணன் கதை 8 அத்தியாயங்கள் கொண்டது. அவதாரம், காளியமர்த்தனம், ராஸக்ரீடா, கம்ஸவதம்,ஸ்வயம்வரம், பாணயுத்தம், விவிதவதம், ஸ்வர்காரோகனம். இவை இன்றுவரை குருவாயூரில் ஆலயத்தில்  இரவு கருவறை நடை சாத்தியபின் பக்தர்கள் வேண்டுதலாக கிருஷ்ணனாட்டம் என்ற பெயரில் நடைபெறுகிறது. உபன்யாச சக்கரவர்த்தி சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் தொழுநோயால் பா

குருவாயூருக்கு வாருங்கள்..9

படம்
  குருவாயூரில் கண்ணன் நடத்திய திருவிளையாடல்கள்... மேல்பத்தூர் நாராயண பட்டதிரி தன் குருவின் வாதநோயைத் தான் பெற்றுக் கொண்டு குருவா யூரப்பனின் முன்பு அமர்ந்து தினமும் பாகவதத்தை ஆதாரமாகக் கொண்டு நாராயணீயம் பாட, அழகுக்கண்ணன்  தலையசைத்து ஆமோதிக்க  அவரது நோயும் தீர்ந்தது. நமக்கு நாராயணீயம் என்ற அற்புதப் பொக்கிஷம் கிடைத்தது🙏🏼 குருவாயூரைச் சுற்றியுள்ள ஊர்களில் எழுத்தச்சன், பட்டத்திரி, லீலாசுகர், பூந்தானம் ஆகிய மகான்களும் கவிஞர்களும் வாழ்ந்திருந்தனர். மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் மகாவிஷ்ணுவாகவும் பூந்தானம், வில்வமங்களம், மானதேவன் குருர் அம்மா ஆகியோர் பாலகிருஷ்ணனா கவும் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டனர். இறைவனே விருப்பப்பட்ட இளநீர் அபிஷேகம் இவ்வாலயத்தில் ஆராட்டு நாளன்று நடக்கிறது. அதற்கான இளநீர் காய்களை இழவ சமூகத்தைச் சேர்ந்த தம்புரான் படிகள் குடும்பத்தினரே இன்றுவரை அளித்து வருகின்றனர். முந்தைய நாட்களில் அந்த சமூகத்தினருக்கு ஆலயத்தில் நுழைய அனுமதி இல்லை. ஆராட்டு நாளன்று ஆலய அர்ச்சகர் ஒருவர் கிட்டை என்ற தென்னை மரமேறியிடம் சுவாமிக்கு இளநீர் அபிஷேகத்திற்கு

குருவாயூருக்கு வாருங்கள்..8

படம்
  குருவாயூரப்பனை தரிசித்து விட்டோம். இனி அங்கு தினசரி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி... குருவாயூர் கிருஷ்ணணை தரிசித்த பின், அருகில் உள்ள மம்மியூர் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் சிவன் – பார்வதியை வழிபட்டாலேயே குருவாயூர் தரிசனம் முழுமை பெறும் என்பது ஐதீகம். மிகப் பழமையான மம்மியூர் ஆலயம் மிக அருமையாக உள்ளது.  ஆண்கள் மேல் உடை இல்லாமல் வேட்டியுடனும், பெண்கள் தங்களது கலாசார உடைகளை அணிந்தும் குருவாயூரப்பனை தரிசிக்கச் செல்ல வேண்டும். நடை மூடும் முன் எட்டு வகை மூலிகைகளால் ஆன தீபத்தூள் கொண்டு திருப்புகை காட்டப்படும். இதற்கு கிருமிகளை அழிக்கும் வல்லமை உண்டு. தங்கக் கலசங்களில் நிரப்பிய புனித நீரால் ‘பிரம்ம கலச மந்திரம்’ சொல்லிக் கொண்டு தினசரி கும்பாபிஷேகம் செய்யப்படுவது இந்த ஆலயத்தின் சிறப்பு. குருவாயூரில் துலாபாரம் பிரசித்தமானது. தங்களது வேண்டுதலை ஒட்டி எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நாணயங்கள், பழங்கள், சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை பக்தர்கள் வழங்குகின்றனர். சொறி, சிரங்கு போன்ற தோல் நோய் பீடிக்கப்பட்டவர்கள், இங்கு எடைக்கு எடை சேனைக் கிழங்கை காணிக்கை செலுத்து

குருவாயூருக்கு வாருங்கள்..7

படம்
  குருவாயூரப்பனின் அழகு நம்மை மெய்மறக்கச் செய்கிறது. அவனை அப்படியே அள்ளி அணைத்து விடும் ஆசை ஏற்படுகிறது. சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை. வரிசை யில் நின்று அனைவருக்கும் ஒரே மாதிரியான தரிசனம். சிறப்பு தரிசனம், தனிவரிசை எதுவும் இல்லை. முதியோர் வரிசை ஆலயத்தினுள் பிரகாரத்தில் காலை 8-10, மாலை 6-8  உண்டு. உள்ளே பூஜிக்கும் அர்ச்சகர்கள் மனம் ஒன்றி அவர்கள் கடமையை செய்வது மனநிறைவு. அர்ச்சனைகள் செய்யப்படுவதில்லை என்பதால் யாரும் எவரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. கர்ப்பகிரகத்தில் சந்தனம், அபிஷேகித்த பால் எதுவும் கொடுப்பதில்லை. தரிசனம் செய்துவிட்டு வெளிவரும்போது அபிஷேகமான சந்தனமும் காலை தைலாபிஷேகம் ஆனதும் தைலமும்,பாலும்  இலவச பிரசாதமாகத் தரப்படுகிறது. அத்தைலம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது.  உன்னிகிருஷ்ணனுக்கு நிவேதித்த நெய்பாயசம், பால்பாயசம்,அப்பம்,அவல், அடை,களபம்,வெண்ணெய், திரிமதுரம்,சர்க்கரை பாயசம், அபிஷேக எண்ணெய் அனைத்தும் விற்பனை செய்யப் படுகிறது. குருவாயூரப்பன் தினமும் 12 திவ்ய நாமங்களுடன் பக்தர்களை அனுக்கிரகிக்கிறார். நிர்மால்ய தரிசனம்–விசுவரூப தரிசனம்..  1.தைலாபிஷேகம் – வாத ரோகாக்னன்;

குருவாயூருக்கு வாருங்கள்..6

படம்
  இனி ஆலயத்தின் உள்ளிருக்கும் சிறப்பான இடங்களையும் குட்டிக் கண்ணனையும் தரிசிப்போம். கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புற மரச் சுவரில் உள்ள சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்குள்ள ஆராட்டுக்குளம் எனப்படும் ருத்திர தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. இக்குளத்தில் சிவபெருமான் ருத்ரனாக இருந்து மகாவிஷ்ணுவை போற்றி கடும் தவம் இருந்ததால் இந்த குளம் ருத்ர தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. கோயிலின் தென்பக்கம் உள்ள வருண தீர்த்தம் எனப்படும் கிணற்றில் இருந்தே அபிஷேகத்துக்கான நீர்  எடுக்கப்படுகிறது. குருவும், வாயுவும் வருணனை பூஜித்ததை அடிப்படையாகக் கொண்டு இக்கிணற்றில் வருணனை ஆவாஹனம் செய்துள்ளதாக ஐதீகம்.  சுவாமி புறப்பாட்டின்போது பரிவார தேவதைகளுக்கு நடப்பது போன்றே இந்தக் கிணற்றுக்கும் பூஜை நடைபெறும். இதன் நீர் வற்றுவ தில்லை. இதற்குள் எண்ணற்ற சாளக்கிராமங்கள் இருப்பதாக நம்புகின்றனர். இதன் தீர்த்தம் நோய் அகற்றும் அருமருந் தாகவும் விளங்குகிறது. கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன். குருவாயூரப்பனை, உன்னி (குழந்தை) கிருஷ்ணன் என்கிறார