Garden_to_table..1













#QHKInMyGarden2023
#Category1
#Garden_to_table

என் வீட்டுத் தோட்டத்தில்...🌱🌿🍃
தோட்டமும் அதிலிருந்து கிடைக்கும் பூக்களும், காய்கறிகளும் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் விஷயங்கள். என் அப்பாவும், கணவரும் வங்கியில் பணிபுரிந்ததால் இரண்டு, மூன்று வருடத்திற்கொருமுறை மாற்றல். இதனால் பல ஊர்களில் படிக்கும், வாழும் வாய்ப்பு கிடைத்தாலும், நாங்கள் குடியிருந்த வீடுகளில் தோட்டத்திற்கு இடமிருக்காது.

அடுக்குமாடி குடியிருப்பு வாசம் அலுத்துப் போய் தனி வீட்டில் வாழ ஏங்கிய சமயம் கிடைத்தது  இந்த புண்ய க்ஷேத்திரம் வீடு. தோட்டம் போடவென்றே அதிக இடம் வாங்கினோம். கத்தரி, வெண்டை, வாழை என்று பலவும் காய்த்து இங்கு குடியிருப்போருக்கும் கொடுத்து மகிழ்வோம்.

கருவேப்பிலை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, மின்ன இலை, மணத்தக்காளி கீரை, புதினா, , வெற்றிலை போன்ற மருத்துவ பயனுள்ள செடிகள் நிறைய.தென்னை மரங்களும் இருப்பதால் தேங்காய்த் தட்டுப்பாடு கிடையாது.

இங்கு நான் செய்துள்ளவை என் தோட்டத்து செடிகளிலிருந்து ஃப்ரஷ்ஷாகப் பறித்து, சத்தாக செய்த கண்டதிப்பிலி இலை ரசம், மின்ன இலை மோர்க்குழம்பு, ஓமவல்லி துவையல், தேங்காய் பாயசம்.


கண்டதிப்பிலி குச்சிகளைத்தான் ரசம் செய்வோம். நான்  அதன் இலைகளை வதக்கி செய்வேன். மிக ருசியாக இருக்கும்.

ஓமவல்லி இலைகளை வதக்கி அத்துடன் கறிவேப்பிலை, தேங்காய் மற்ற சாமான்களை வறுத்து அரைக்கும் துவையல் வயிற்றுக்கு நல்லது.

மின்ன இலை (Premna Latifolia) என்பது ஒரு கீரை வகை. இதற்கு அமாவாசை பச்சிலை என்றும் பெயர் உண்டு. இதை இறந்தவர்களுக்கு திதி செய்யும் நாட்களில் சமைப்பது விசேஷமானது. இது மருத்துவ குணம் கொண்டது. வாதம், காய்ச்சல் தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இந்தக் கீரையில் கூட்டு, சட்னி இவை செய்யலாம். இதில் நான் மோர்க்குழம்பு செய்துள்ளேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..13

மேல்நாட்டு மருமகள்!